இயற்கையின் அழகுக்கு என்ன காரணம் ?

எண்ணங்களை அள்ளி எடுத்து
எட்டுத் திக்கும் தூவினேன்
எழில் மலர்கள் பூத்துப் பூத்து
எந்நேரமும் சிரித்து மணத்தது...
ஏன் இயற்கை ஏகாந்தமாய் இருக்குது ?
ஏங்காத மனம் எனக்குள்ளே இருக்குது !
என்னாலே இவ்வுலகம் சிரிக்குது....!
என் பெயர் இறைவனல்ல - கவிஞன்...!