உளக்குமுறல்
காலத்தின் கோலம் தன்னில்
அன்பென்று அழிக்கப்பட்டு
இன்னல் பட்டு ஆளாக்கிய -உந்தன்
பெற்றோர் தன்னை
கசக்கப்பட்ட காகிதமாய்
வயோதிப மடத்திலே கழித்துவிட்டு
சுயநலமாய் -வெளிநாட்டு
மோகம் கொண்டு மேன்மையை
மழுங்கடிக்கும் மானிடா
நாளை உன் தன் வழியிலே
உன் எதிர்காலம்
இப்படிக்கு
ஆதரவுஅற்ற பெற்றோர்