தேசத்தின் தராசு - நாகூர் கவி

அழுவோர்கள் பலர்
சிரிப்போர்கள் சிலர்
அனாதைகள் பலர்
ஆதரவளிப்போர் சிலர்
விதவைகள் பலர்
வாழ்வளிப்போர் சிலர்
உறங்குபவர் பலர்
உழைப்பவர் சிலர்
தீயோர்கள் பலர்
நல்லோர்கள் சிலர்...

கல்லாதோர் பலர்
கற்றோர்கள் சிலர்
காதலிப்போர் பலர்
மணப்பவர் சிலர்
ஏழைகள் பலர்
சீமான்கள் சிலர்
கோழைகள் பலர்
வீரர்கள் சிலர்
சாக்கடைகள் பலர்
சான்றோர்கள் சிலர்...

மிருகங்கள் பலர்
மனிதர்கள் சிலர்
மனிதர்கள் பலர்
புனிதர்கள் சிலர்
பாமரர்கள் பலர்
பண்டிதர்கள் சிலர்
தோற்றவர்கள் பலர்
வென்றவர்கள் சிலர்
அறியாதோர் பலர்
அறிவுடையோர் சிலர்
தொண்டர்கள் பலர்
தலைவர்கள் சிலர்...!

எழுதியவர் : நாகூர் கவி (14-Sep-13, 7:02 pm)
பார்வை : 83

மேலே