வேறு கேள்வி எதுவும் இல்லை

வெளிநாட்டு மாப்பிள்ளை
வேறு கேள்வி எதுவும் இல்லை
நல்லவனா கெட்டவனா
தெரியாது ,,,,
படிப்பென்ன தெரியாது
நெட்டையா கட்டையா
மூடி கொட்டி
தலையென்ன மொட்டையா
அதுவும் தெரியாது ,,,
பஞ்சினில் படுத்து
பந்தாக்காட்டும் பரதேசிகள்
நாகரீகம் அறியா நாதாரிகள்
நடிப்பில் குறிப்பு தேடும்
குள்ளர்கள் ,,,,,,
''அ ' அறியாத அலங்கோலங்கள் எல்லாம்
ஆங்கிலம் பேசும் ,,,,
கூவாயு என்று கூடியிருந்தவரையும்
குறிவைத்து கூவும் கூட்டம்
வெளிநாடு மாப்பிளையின் நாட்டம் இது
தோட்டத்தில் இருந்து
துலா கிணற்றில் அள்ளிய நீரில்
துள்ளி விளையாடிய நாங்கள்
புள்ளி வைப்போம்,,,,
புதியதொரு உலகில் ,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (16-Sep-13, 12:11 am)
பார்வை : 91

மேலே