கொலைக்காரனுக்கு ...

கொஞ்சம் நில் ...!
நீ சப்பித்துப்பியவனை
சில நொடிகள்
திரும்பிப்பார் ....

பாலுட்டி வளர்த்து
பதறுகின்ற அவன்
பாச அன்னையைப்பார் ....

அறிவை அள்ளிக்கொடுத்து
அந்தரத்தில் தவிக்கும்
அவன் ஆசை
அப்பாவையும் பார் ...

விதவையாகி
வீறிட்டு அழும்
அவன் அன்பு
மனைவியையும் பார் ...

முத்தாய் பெற்றெடுத்து
முத்தமொன்று கொடுக்க
நாதியற்றுக் கிடக்கும்
அவன் முதல்
வரிசைப் பார் ...

இத்தனைக்கும் மேலாக
இவனுக்கு துக்கத்தில்
மௌனிகளாய்
கண்ணீர் சிந்தும்
சுற்றத்தைப் பார் ...

உனக்கும் புரியும்
வலியின் ரணம் !

உன் உள்ளத்தில்
உச்சமாய் கையை வைத்து
கேட்டுப் பார்

நிம்மதியாய் நீ
ஒரு நிமிடம்
உறங்கியதுண்டா ?

பாசத்தோடு உன் மனைவியிடம்
சில கதையெனும்
பேசியதுண்டா?

குறும்புத்தனமாய்
குழந்தைகளோடு
கொஞ்சிக் குலாவி
ஆசை முத்தம்
கொடுத்ததுண்டா ?

பந்தியிலே உட்கார்ந்து
பல வண்ண சுவைகளோடு
பசி தீர
சாப்பிட்டதுண்டா?

சிந்தித்துப் பார்
கொலை
மகா கொடிது என்றும்
பாசம்
இனிதிலும் இனிது என்றும்
பாடம் கற்பாய் !

எழுதியவர் : பிரகாசக்கவி - (16-Sep-13, 12:03 am)
சேர்த்தது : prahasakkavi anwer
பார்வை : 44

மேலே