அன்னை

என்னை ஈன்ற அன்னையே ...
என்றும் தெய்வமாய்
நினைப்பேன் உன்னையே ...

என்னை இந்த உலக்குக்கு
தந்த தாயே ...
எனக்காக வாழ்கின்றாய் நீயே ...

பல மாதங்கள் என்னை
சுமந்த தாயே ....
பல ஜென்மங்கள் தொடரும்
சொந்தமும் நீயே ...

துயரம் என்றாலும் துயலாமல்
பாலூட்டி வளர்த்த தாயே ...
அல்லும் பகலும் உறங்காமல்
நான் அழும்போது
தாலாட்டி வளர்த்த தாயே ...
என்னை மானிடனாய்
பெற்றெடுத்த தாயே ...

என் ஆயுள் முழுதும்
உனக்கு சேவை செய்தாலும் அது
உன் சேவைக்கு ஈடு ஆகாது ...

தவறு செய்யும் போது
அத்தவ்ற்றைத் திருத்தி
அன்பைத் தந்த தாயே ...

அன்னையின் உள்ளம்
அறிந்த பிள்ளை நான் ...
என்றும் மறுப்பதில்லை
அன்னையின் சொல்லை தான்...

பிறக்கும் முன்னே
உன் துயரை நான் அறிந்ததில்லை ...
பிறந்த பின்னே
துயரை நெருங்க விடுவேனா ...

பேச கற்றுகொடுத்த தாயே ...
பேசட்டும் உன் சிறப்பை இவ்வுலகமே ...


இந்த கவிதை என்னை ஈன்ற அன்னைக்கு சமர்பிக்கின்றேன்

எழுதியவர் : முத்துகிருஷ்ணன்.ப (13-May-10, 7:43 pm)
Tanglish : annai
பார்வை : 2743

மேலே