வாழ்க்கை என்றால் ?!...

அன்பும் - எதிர்ப்பும்
ஆர்வமும் - சோம்பலும்
மகிழ்வும் - கவிழ்ப்பும்
நிறையும் - குறையும்
என்ற
நிற நுரைகள்மட்டும்
நிறைந்து நிற்கும் சாகரம்
வாழ்கை
ஆணி வேரற்ற ஆலமரம்!

பிறந்தவுடன் இறக்கும் நாளை நோக்கி
நம்மை நகர்த்தி செல்லும் வாகனம்
வாழ்க்கை
நொடிப்பொழுது மோகனம்!

உயிர் வந்த உடலுக்காய்
உயிர் தன்னை காப்பதற்காய்
உயிர்விட்டு உழைக்கின்ற
காலகட்ட இடைவெளி - வாழ்க்கை !
அது கரைந்துவிட்டால் வான்வெளி !

எழுதியவர் : அருள் ராம் (28-Sep-13, 1:59 pm)
சேர்த்தது : arul ram
பார்வை : 108

மேலே