அதனால்... உறவு வேண்டும் !

ஈன்ற தாயும்
இணைந்த உயிர்பிறப்பும்
கொண்ட நட்பும்
கூடும் உறவும்
வாழ்க்கைசோலையின் கட்டாய வேலிகள்;
வறண்ட பூவிலும் வந்துகூடும் வண்டுகள் !

தனை நினைக்க மறந்திடினும்
இதுதனை நினைக்க வைத்து
நிகழ்காலம்தனில் நிலைத்துநிற்க உதவும்
ஆதார சாய்மானம் - அதே சமயம்
ஆபத்தான வளையம்!
இதனால்
கட்டாய பலனுண்டு - நன்மையையும் ,தீமையும் !
இதனை கட்ட விழ்த்தால்
பலவுண்டு - நன்மையையும்;தீமையும்1

அந்த வான்நிறம் மாறுவதற்குள் மாறிவிடும்
வாழ்வினில்தான் எத்தனை கோலம்?!...

எழுதியவர் : அருள் ராம் (28-Sep-13, 2:19 pm)
சேர்த்தது : arul ram
பார்வை : 61

மேலே