தரா
"சுடர் விளக்கினைப்போல்"...
__________________________________ருத்ரா
அது ஆடும் அசையும்
நெளியும்
திருக்கு முறுக்காய்
சுழலும்.
அணைந்துவ்ட்டது போல்
மீண்டும் சுடரும்.
வானத்தையே பொசுக்கி
சாம்பல் ஆக்கி கையில் தரும்.
அப்புறமும்
புன்சிரிப்பை
தகத்தக தங்கமாய்
உருக்கித்தரும்.
ஆனாலும்
என் இதயத்திற்கு
முட்கிரீடம் சூட்டி நிற்கும்.
ரத்தம் வழிய
ஒரு முத்தம் தேடுகின்றேன்.