கட - உள்!

கண்ணீர்தான் கவலையை
மறக்கடிக்கும் கருவி எனில்
கண்ணீர் கடல் ஒன்று கொடு!

கனவுதான் காலமெல்லாம்
மகிழ்ச்சிதரும் வழிஎனில்
உறக்கத்தையே என்றும் கொடு!

இந்த கம்பியற்ற சிறையுள்
கவலைகொள்ளும் இதயத்தை
விடுதலை வெளிக்கு கொண்டு வா!

சூடுபோடும் சுரங்களை நிறுத்திவிடு !
விலகி நிற்கும் சுவர்களை சேர்த்துவிடு!
தாங்க மறுக்கும் தரைகளை தட்டிகொடு !
தூங்க மறுக்கும் விழிகளை கட்டிவிடு!

இந்த புலம்பல்களை
இறக்கி வைக்கும் ஓர் இடமே
உன் கடவுள் திருவிடம் -
கட - உள் உனக்குள்
அதுவே திருவிடம்!
வரம் கிட்டும் - வரும் மாற்றம் !

எழுதியவர் : அருள் ராம் (28-Sep-13, 1:47 pm)
சேர்த்தது : arul ram
பார்வை : 96

மேலே