சிற்பியும் நானே சிலையும் நானே !
தமிழ்மொழி எனும் பளிங்கினை
சிந்தனை எனும் சிற்றுளிகொண்டு
கற்பனை துணையுடன் உருகொடுத்து
சமுதாய நோக்குடனே என்றும் நான்
கவிதைகள் பலபல வடிவமைக்கும்
சிற்பியும் நானே சிலையும் நானே !
சீரான எண்ணமுடன் சீர்மாறாமல்
சீர்கெட்ட சமூகமும் திருந்திடவே
சீரான பாதையில் சென்றிடவே
சிதைந்திட்ட நெஞ்சங்கள் சீர்பெற
சிந்தையின் துளிகளால் வடித்திடும்
சிற்பியும் நானே சிலையும் நானே !
பழனி குமார்