சிற்பியும் நானே சிலையும் நானே !

தமிழ்மொழி எனும் பளிங்கினை
சிந்தனை எனும் சிற்றுளிகொண்டு
கற்பனை துணையுடன் உருகொடுத்து
சமுதாய நோக்குடனே என்றும் நான்
கவிதைகள் பலபல வடிவமைக்கும்
சிற்பியும் நானே சிலையும் நானே !

சீரான எண்ணமுடன் சீர்மாறாமல்
சீர்கெட்ட சமூகமும் திருந்திடவே
சீரான பாதையில் சென்றிடவே
சிதைந்திட்ட நெஞ்சங்கள் சீர்பெற
சிந்தையின் துளிகளால் வடித்திடும்
சிற்பியும் நானே சிலையும் நானே !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (5-Oct-13, 1:05 pm)
பார்வை : 754

மேலே