கனவு
கனவு காணலாம் என்று 
கண்ணை மூடினேன் !
வந்தது கனவு அல்ல 
கவலை !
எதிகாலத்தைப் பற்றி !
இன்று கனவு கண்டேன் 
நாளை நனவாகும் என்று 
ஆனால் ,
நாளை என்பது 
இன்றானது !
இன்று என்பது 
நேற்றானது !
இவ்வாறு ,
எதிர்காலம் ,நிகழ்காலமாகவும் 
நிகழ்காலம் இறந்தகாலமாகவும் 
மாறியதே தவிர 
எதிர்கால கனவு மட்டும் 
கேள்விக் குறியாகவே 
இருக்கிறது !!!
இந்த ,
கேள்வி குறியானது 
மாறவேண்டும் 
ஆச்சர்ய குறியாக ...
என் வாழ்வு 
நிற்க வேண்டும் உயர்வாக !!!
 
                    

 
                             
                            