மழைக்காலம்

பள்ளி செல்லும் வழியில்
சேற்றில் கால் வைக்காதே
அம்மா கத்தினாலும்
உள்மனம் அழுக்கு பட
ஆசையோடு ஓடி ஓடி
மிதித்து குதிக்கும்
வேகமாய் முதுகில் தாளமிட்டு
என்னை ஒப்பாரி பாட செய்து
இழுத்து செல்வாள்
வெறுங்காலில் அனைத்தையும்
மிதித்து நடந்தபடி .
என் பள்ளி சுமை
அவள் இடுப்பில்
ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும்
கருமேகம் சத்தமிட்டு
சிதறிய மழைத்துளிகள்
வேகமாய் எனை
நனைக்க உடனே
அம்மா குடை விரித்தாள்
புடவை தலைப்பினிலே ...!
என்னை நனைத்தால்
அன்பு மழையினிலே..!!
புரியாத வயதில்
ஏதேதோ செய்தாய்
எல்லாம் புரிந்த போது
எனை விட்டே போனாய் .
ஒவ்வொரு மழைக்காலமும்
உனை தூறியே செல்லும் ...!

எழுதியவர் : நந்தலாலா (8-Jan-11, 4:06 pm)
சேர்த்தது : nandhalala
பார்வை : 388

மேலே