மாமியார் கைவரிசை

தீபாவளி சீர்வரிசை
மாமியார் கைவரிசை
தலையாட்டி மகனுக்காகத்
தட்டிக் கேட்டுவாங்கும்
துணிகரம்!

மாதர் தம்மை
இழிவு செய்யும்
மடமையக் கொளுத்தச்
சொன்னான் பாரதி..
எங்கெல்லாம்
மருகளுக்கு கொடுமை நடக்கிறதோ
அதற்குப் பின்னால் நிச்சயம்
ஒரு மாமியார் இருப்பார்.
பெண்களாய்ப் பார்த்து
திருந்தா விட்டால்
பெண்களுக்கு எதிரான
வன்கொடுமைமையை
ஒழிக்க முடியாது.
மறவாதீர்
ஆண்களைக் கட்டிப்போடும் கயிறு
பெண்களின் கையில்தான்!

எழுதியவர் : அன்பு மலர் (31-Oct-13, 10:28 pm)
பார்வை : 124

மேலே