நிலவின் சோகம்
எதைக் கண்டதால்
விலகி நீ செல்கிறாய் என்னை விட்டு.
எத்தனையோ நீள் இரவுகளில்
என் தழுவலில் மயங்கிக் கிடந்தவனல்லவா நீ!
பலப்பல முறை என் தழுவல்களில்
உன்னைக் குளிர்வித்திருக்கிறேன்.
என் அழகில் சொக்கிப் போன நீ,
என்னை இதுவரைத் தழுவியதில்லை.
நான் குறை, உடலாய் வந்தாலும்
நிறை உடலாய் வந்தாலும்
அருவெறுத்ததில்லை நீ
என் எல்லா அழகையும்
அள்ளிப் பருகி இருக்கிறாய்.
என் தோழிகள் சூழ உன்னைக்
கானவந்ததாலா என்னை
வெறுத்து ஓதிக்கிவிட்டாய்?
அல்லது
என் கரிய நிறத் தந்தையின்
பாதுகாப்புடன் வருவதாலா?
என் உடலின் வெண்மை நிற
அங்கங்களால் உன்னைத்
தழுவிய போதும் ஏனோ என்னை
பார்த்தவன் போல் பிரிந்து போகிறாயே!
புதிதாய் உனக்கு கிடைத்த
காதலியின் அழகில் ஏன்
என்னை வெறுத்துப் போகின்றாய்.
உன் காதலியின்
சுருண்ட நீண்ட கூந்தலோ
நீல,நீள் விழிகளோ என்னிடம்
இல்லை என்பதாலா?
இல்லாத இடையை
இருப்பதைப் போல் காட்டும்
அந்த ஏமாற்றுக் காரியை
நேசிக்கிறாயே!
அவளைப் போல
மழலை மொழி பேசி
மயக்க தெரியாது எனக்கு.
சிவந்த இதழ்களுகிடையே
முல்லையா,முத்தா
என்று தெரியாத
குழப்பமான புன்னகையை
வீசத் தெரியாது எனக்கு.
என் எதிரிலேயே
என்னைவிட அவளழகு என்று
புகழ்கிறாயே வஞ்சகப் பொய்யனே!
கூடி என்னைக் களித்த நாட்களெல்லாம்
என்னில் பிரமித்து
என்னை, என் அழகை கவி புனைவாயே
இன்றோ அவளை உன் இதயத்தில் ஏற்றிவிட்டு
என்னை எற்றித்தள்ளி விட்டாயே!
என்றெல்லாம் ஏங்கித் தவித்து
பனிமழையை கண்ணீராய்க் கொட்டி
பிதற்றி அழுதது நிலவு.