குழந்தையாக
தனித் தீவாக நான்,
என்னை கடலாக சூழ்ந்திருந்தாய்..
கடல் அலையாக உன் நினைவுகள் என்னை
தொட்டு தொட்டு விளையாடியபோதும்
என் உயரில் உன்னை ஏந்திக்கொண்டேன்..
உன் நினைவுகளில் என்றாவது ஒரு நாள்
முழுதுமாய் மூழ்கிடுவேன் என்று தெரியாமல், நான்...
நெருப்பை தீண்ட செல்லும் ஒரு குழந்தையாக...