ஜான் பென்னி குக்

ஜான் பென்னி குக்
JHON PENNY CUICK
(1841-1911)
---------------------------------------------------
வரலாறு அல்ல வாழ்த்துப்பா.
---------------------------------------------------
சாரா- ஜான்பென்னி
தவ மைந்தராம்
ஆங்கில நாட்டில்
பிறந்தவராம் .
அரசு ராணுவப்
பொறியாளராம்.
அன்னவரவராம்
ஜான்பென்னியாம்.
வந்ததும் தமிழகம்
புண்ணியமாம்.

பொறியியல் கற்ற
பென்னியவர்
பொதுத் துறை
பொறுப்பு ஏற்றவர்.. .
தென்தமிழ் நாட்டுத்
தேனிவட்டம்
வான்மழை பொய்த்து
வரட்சிக் கண்டே
வாடி வருந்தி
மனம் நொந்தார்.

மேற்குத்தொடர்சசி
மலையிற் தோன்றி
தெற்கில் வீணாயோடி-
அரபியில் கலக்கும்--முல்லைப்
பெரியாற்றை- வடக்கிலோடும்
திசைமாற்றி- வளங்கண்டிட
வழிவகுத்து- அணைக்கட்டித்
தடுக்கும் ஆலோசனையும்-
ஆங்கில அரசின் முன்வைத்தார்.

ஏற்றது வெள்ளையர் அரசன்று
எழுபத்தைந்து இலட்சம் தந்து..
வேலையாராம்பித்த நேரத்தில்
விடா மழையும் பெய்தது.

திட்டந் தீட்டிக் கட்டிய அணை
தேடிச்சென்றது கடலுக்கே.
கட்டங்கட்டிய காசுக்கு மேலே
காலணாவும் தரவில்லையரசே.

கல்லு முள்ளு
கொல்லுஞ்சிங்கம்
பல்லி பாம்பும்
உள்ளிருக்கும் .

வெல்லும் முயற்சியோ !
வேகந்தகர்க்குமோ!
எடுத்தச் செயலதும்
வென்றிடவேண்டும்
கெடுப்பதெதுவும்
அகன்றிட வேண்டும்
இருக்குஞ்சொத்தை
விற்றிட வேண்டும்.
முடித்திட இதற்கு
வேறென்ன வேண்டும்!.

எங்கோ பிறந்தார்க்கு
இங்கேன் அக்கறை?
அக்கரைச் சொத்து
இக்கரை. வந்தது
மனித நேயம்
மீண்டது மறுகரை.
அணையும் எழுந்தது
வளமும் தந்தது.
வைகை பெருகி
வளர ஓடியது.
வாழ்கிறது தென்
தமிழ் நாடே இன்று!.

கரிகாலன் கட்டிய
கல்லணை வாழ்வே!
பென்னி கட்டிய
பெரியணை வாழ்வே!
சுண்ணமுங்கல்லும்
கடுக்கா பலமே!
என்னதான் அதிர்ச்சி
எதையுந் தாங்குமே!

அந்நியரொருவர்
ஆன்மாவின் இரக்கம்
இந்தியனுக்கேனோ
இல்லாதொழிந்ததோ!
தண்ணீர் வார்த்தவன்
தெய்வமாகினான்.
இன்னுமவன் பேர்
இட்டும் அழைக்கிறோம்!

மணிமண்டபம் எழுப்பிய
தமிழே வாழ்க!
நன்றியை மதித்த
அரசே வாழ்க!
மனிதமென்பது
ஒன்றினமென்றான்.
இனியன் பென்னி
புகழென்றும் வாழ்க!!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (6-Nov-13, 9:03 am)
பார்வை : 188

மேலே