இரண்டாம் அத்தியாயம் -16

சென்னை ஏர்போர்ட் ,,,,,

விமான வருகைக்கான அறிவிப்பு ஒலித்தது.

விமானத்தின் சக்கரம் வெளியில் வந்து தரையை உரசி ஒரு வட்டமடித்து நின்றது, பயணிகள் ஒவ்வொருவராக வெளியே வந்தனர்

அவர்களோடு வெளியே வந்தான் சுந்தர், ஏர்போர்ட் டைம் 12.45 என்று ஒரு குரல் கூறியது

எல்லா செக்கிங் முடித்து வெளியில் வந்தவனை வரவேற்க காத்திருந்தார் சுகுமார். சுந்தாரின் மாமா

"ஹலோ சுந்தர்"

"எப்டி இருக்கீங்க மாமா "

"எனகென்ன ஜம்முனு இருக்கேன். ஆமா நீ என்ன இவ்வளோ அவசமா சென்னை வந்துருக்க"

"ஆமா மாமா உங்ககிட்ட ஒரு ஹெல்ப் கேட்டு வந்துருக்கேன்"

"ஹெல்பா,,, சரி வா கார்-ல போய்டே பேசலாம் "

காரில் ஏறினார்கள். "என்ன விஷயம் சுந்தர்"- என்றார் சுகுமார்.

சுந்தர் முத்துவின் கதை தொடங்கி மதன் நிலாவை தேடியது வரை எல்லாவற்றையும் கூறினான்

"வெரி interesting ,,,,,, சரி சுந்தர் இப்ப நான் உனக்கு என்ன ஹெல்ப் பண்ணனும் "

"மாமா அந்த நிலா 10 வருசத்து முன்னாடி இங்க வந்துருக்காங்க நீங்க 7,8 வருசமா இங்க இருக்கீங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் நிலா பத்தி கேட்க போறேன்" என்றான் சுந்தர்

"இது எந்த அளவுக்கு சாத்தியம்னு நினைக்கிற சுந்தர்"-என்றார் சுகுமார்

"யார்னே தெரியாம இருந்த நிலா இப்ப சென்னைல இருக்காங்ககுற வரைக்கும் சாத்தியம் இருக்கும்போது இதுக்கும் சாத்தியம் இருக்கும் மாமா "- என்றான் சுந்தர்

"சரி வீட்டுக்குள்ள வா மணி 1.15 ஆச்சு சாப்டுட்டு போய் தேடலாம்"- என்றார்

அவனும் பயண களைப்பில் இருந்ததால் ஒத்துக்கொண்டான்

வீட்டுக்குள் நுழைந்ததும் ," வாங்க அத்தான்"- என்றால் ஜானகி . சுகுமாரனின் மகள் கொஞ்சம் குறும்புகாரிதான்.

ஆனால அவளை சட்டை செய்யும் நிலையில்லை சுந்தர் இப்போது.

சுந்தரும், சுகுமாரும் சாப்பிட்டார்கள். பின் சுகுமாரின் வண்டியில் வேளச்சேரியிலே இருக்கும் அவரது நண்பர்கள் தெரிந்தவர்கள் என்று வேளச்சேரியையே சல்லடையாக சலித்தார்கள்,

சுந்தர் தேவைப்படும் என்று நிலவின் புகைப்படம் ஒன்றை எடுத்துவந்திருந்தான். அதை வைத்து அவளை தேடினார்கள்.

ஆனால் ஒரு positive -ஆனா பதிலும் இல்லை

சற்று வருத்தத்துடன் இருந்தான்,

"என்ன அத்தான் வருத்தமா இருக்கீங்க" என்றாள் ஜானகி

"ப்ளீஸ் ஜானு, கிண்டல் பண்ணாத"

"ஐயோ அத்தான்,,,,, உங்களுக்கு அறிவே இல்லை"- என்றாள்

"என்னமா சொல்ற"- என்றார் சுகுமார் சற்று கோபமாக

"பின்ன 10 வருசம் முன்னாடி அவங்க இங்க இருந்துருக்காங்க அவங்கள இப்ப போய் தேடுனா எப்படி கெடப்பாங்க"


"இப்ப என்ன பண்ணனும்குற"-கடுப்பாக கேட்டான் சுந்தர்

மணி பார்த்தாள் சரியாக 2.30 ,

"இப்ப மணி 2.30 சாயங்காலம் நியூஸ் பேப்பர் வரும் அதுல இவங்க போட்டோவ கொடுத்து தகவல் தேவைன்னு விளம்பரம் பண்ணுங்க, இங்க சென்னைல இருக்குற 6 கோடி பேர்ல யாராவது ஒருத்தருக்கு கூடவா அவங்கள பத்தி தெரியாம போய்டும்"- என்றாள் ஜானகி

"சூப்பர் ஐடியா ஜானு "- சந்தோசமானான் சுந்தர்

"ம்ம் ஓகே ஓகே என்ன ரொம்ப புகழாதீங்க"- என்றாள் பெருமிதத்துடன்

"சரி சுந்தர் அந்த போட்டோவ எடுத்துட்டு வா எல்லாம் நியூஸ் பேப்பர்-ளையும் விளம்பரம் பண்ணலாம்"- என்றார் சுகுமார்

சுந்தரும் , சுகுமாரும் பத்திரிகை ஆபீஸ் சென்று விளம்பரம் அளித்தனர்

அதே நேரம் ,

சென்னையில் காலடி பதித்தனர் முத்துவும், மதனும் ,,,,,,,,,,,,,,

எழுதியவர் : நிலா மகள் (6-Nov-13, 12:42 pm)
பார்வை : 189

மேலே