இரண்டாம் அத்தியாயம்-15
நிலாவின் பெயரை அந்த முதியவர் சொன்னதும் மதனுக்கும் சுந்தருக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை
"இவங்கள உங்களுக்கு தெரியுமா??" - ஆச்சர்யத்தோடு கேட்டான் சுந்தர்
"ம்ம் நல்ல தெரியுமே "
"இப்ப அவங்க எங்க இருகங்கனு தெரியுமா ?"
"ம்ம்,,,,,,, பாவம் அந்த பொண்ணுக்கு நிச்சயம் பண்ண கல்யாணம் நின்னு போச்சு அதோட அவங்க இந்த ஊர விட்டே போய்டாங்க"- என்றார் அந்த முதியவர்
"எந்த ஊர் போயிருக்காங்கன்னு தெரிமா ப்ளீஸ் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க"- அவசரமாக கேட்டான் மதன்
அந்த முதியவர் இவனை உற்று பார்த்தார். பிறகு என்ன நினைத்தாரோ
"தெளிவா விலாசம் தெரியாது ஆனா சென்னைல வேளச்சேரில இருக்காங்கனு கேள்விப்பட்டேன்"- என்றார்
"ரொம்ப நன்றி அய்யா"- என்று கூறி விட்டு தன் பைக் நோக்கி நடந்தான் மதன்
"டேய் மதன் இப்ப மணி 12.15 இன்னும் 15 நிமிசத்துல சென்னைக்கு ஒரு flight இருக்கு நான் அத பிடிச்சி சென்னை போறேன். என் மாமா வேளச்சேரில தான் இருக்காரு அவர்ட்ட சொன்ன ஹெல்ப் பண்ணுவாரு" - சுந்தருக்குள் நிலாவை கண்டுபிடித்துவிடலாம் என்ற புது நம்பிக்கை வந்தது
"சரி டா நீ போ சரியாய் 2.30 கெல்லாம் நானும் சார்-ரும் சென்னைல இருப்போம்"
"சரி டா நான் கெளம்புறேன்"- என்றான் சுந்தர்
மதன் நேரே வீட்டை நோக்கி போனான்
"எங்க போன மதன் இவ்ளோ நேரம்?" விசாரித்தான் முத்து
"இல்ல சார் சுந்தர பாக்க போனேன்"- என்றான்
"சரி சீக்கிரம் சாப்டு flight -க்கு டைம் ஆச்சு" -என்றான் முத்து
இருவரும் சாப்பிட்டு முடித்து உடமைகளை எடுத்துகொண்டு மதுரை ஏர்போர்ட் நோக்கி போனார்கள்
அவர்கள் ஏர்போர்ட் போன போது ஒரு flight டேக் ஆப் ஆனது,,,,,,,,,,,,,,,,,,,