அழகிய தமிழ் மகளே

அழகிய தமிழ் மகளே...!
24 / 06 / 2025

முள்ளென்று குத்தி
முடக்கும் இவ் வாழ்வினிலே
கள்ளுண்ணும் போதையென
மயக்கி போனாளே
பூவொன்று பூத்தது போல் நின்றாள்.
பூவுலகம் முழுதும் மணந்தாள்
பூக்குமோ எனை தாக்குமோ
நிலை தடுமாறுமோ வாழ்வே...
ஆ..ஆ..ஆ... ஆ...ஆ..

அவள்
அழகிய தமிழ் மகளே
எந்நாட்டவர் போற்றிடும் தலைமகளே
எந்நாட்டவர் போற்றிடும் தலைமகளே...
குறுநகை புரிந்து
குலம்தனை காக்கும்
குடும்பத்தின் குலமகளே..
- அவள்

காதலில் கவர்ந்தவளோ - பொறுப்பாய்
கடமையில் நிறைந்தவளோ
ஆ..ஆ..ஆ... ஆ...ஆ..
காதலில் கவர்ந்தவளோ - பொறுப்பாய்
கடமையில் நிறைந்தவளோ
கண்ணென காத்திடும் கருவரையோ - குல
கடவுளின் மறு உருவோ - அவள்
கண்ணென காத்திடும் கருவரையோ - குல
கடவுளின் மறு உருவோ
- அவள்

பாசத்தில் நேசம் வளர்த்தவளோ - அதை
பாரெங்கும் கொண்டு சேர்த்தவளோ
பாசத்தில் நேசம் வளர்த்தவளோ - அதை
பாரெங்கும் கொண்டு சேர்த்தவளோ
ஊனுக்குள் உறங்கும் உயிரெனவே - என்
உதிரத்தில் கலந்து நிறைந்தவளோ
ஊனுக்குள் உறங்கும் உயிரெனவே - என்
உதிரத்தில் கலந்து நிறைந்தவளோ
- அவள்

அழகிய தமிழ் மகளே
எந்நாட்டவர் போற்றிடும் தலைமகளே
எந்நாட்டவர் போற்றிடும் தலைமகளே...
குறுநகை புரிந்து
குலம்தனை காக்கும்
குடும்பத்தின் குலவிளக்கே ..
["செந்தமிழ் தென் மொழியாள்..." என்ற
பழைய பாடலின் பாதிப்பில் உருவான
எனது பாடல் ]

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (24-Jun-25, 2:05 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 41

மேலே