குட்டியா ஒரு காதல் காட்சி
நான்(அலைபேசியில்): செல்லம் ஒரு நிமிசம் மொட்ட மாடிக்கு போயேன்..
அவள்: ஏண்டா எதுக்கு போக சொல்ற.??
நான்: நீ முதல்ல போ செல்லம் போய் நிலவுக்கு ஒரு ஹாய் சொல்லு..
அவள்: மாட்டேன் எதுக்குனு சொல்லுடா???
நான்: ஹ்ம்ம் நான் ரோட்ல நடந்து போயிடு இருந்தேன் செல்லம் இந்த நிலா என் பின்னலையே வந்துகிட்டு இருந்துச்சு..
அவள்: ஹ்ம்ம் அப்புறம்..
நான்: உடனே நான் சொன்னேன் இங்க பாரு நிலா நீ என்னத்த என் பின்னாடி சுத்தினாலும் உன்ன நான் பாக்க மாட்டேன்..
அவள்: ஒ.. அப்புறம்..
நான்: அதுக்கு அந்த நிலா சொல்லுச்சு...என்னோட அழக பார்த்து எல்லாரும் ரசிகிறாங்க நீ மட்டும் எதுக்கு பார்க்காம போறேன்னு சொல்லுச்சு..
அவள்: ஒ.. அதுக்கு நீ என்னடா சொன்ன??
நான்: அதுக்கு நான் சொன்னேன் நீ எவ்ளோதான் அழகா இருந்தாலும் என்னவள் அழகிற்கு ஈடாகமாட்ட னு அவல தவிர வேறு ஏதும் அழகா தெரியாது னு சொன்னேன்,,
அவள்: ஐயோ முடில டா,, அப்புறம்..
நான்: அப்புறம் அந்த நிலா சொல்லுச்சு அப்படினா நான் அவளை பார்க்கணுமே,, அதுக்குதான் உன்ன மொட்ட மாடிக்கு போய் நிலவுக்கு ஒரு ஹாய் சொல்ல சொன்னேன்...
அவள்: ஹ்ம்ம் என் அழகு ராசா,, இன்னைக்கு அம்மாவாசை டா எரும..நிலா இல்ல.
நான்: ஹ ஹ பாதிய செல்லம் உன்ன பார்க்க பயந்துகிட்டு அந்த நிலா ஓடி ஒளிந்சுகிச்சு .. :P :ப
அவள்: ஐயோ செல்லம் போதும் டா,,,முடில,,
நான்: ஹே நான் நிசமா தாண்டி சொல்றேன்,,.......
அவள்: ஹ்ம்ம் ஐ லவ் யு டா....அயோ அப்பா வந்துடாரு நான் போன வைக்கிறேன் ..
நான்: பாய் செல்லம்...