ஒரு கவளம் சோறு,,,,,

ஒரு கவளம் சோறு,,,,,
====================

காலையில இருந்தே நிறைய வேலை,,,
உடம்புக்கு வேறே எதோ சரில்லை லக்ஷ்மி க்கு

லக்ஷ்மி,,,,ன்னு வீட்டு காரங்க கூப்ட
குரல் கேட்டு,,,,இதோ வந்துட்டேங்க,,,ன்னு

சரியாய் நடக்க கூட முடியாத அளவுக்கு,,,,உடம்பு வேதனை,,,என்ன செய்ய,,,ரெண்டும் பொம்பள
புள்ளைங்க ஆய்டுச்சு,,,,

முழுசா நாலு வீட்ல வேலை செஞ்சாத்தான்,,,
ஒரு வேளை கஞ்சி வைத்துக்கும்,,,,
புள்ளைகளுக்கு பாலும் ரொட்டியும்
வாங்கி தர முடியும் ரெண்டு வேளை,,,,

ஏனோ,,அந்த வாரமே,,,,வருமானம்,,ரொம்ப கம்மியா போயிடுச்சி,,,,

அவளுக்கும்,,கஞ்சிக்கில்லாமே,,
போனதோட புள்ளைகளுக்கும்,,,
அறை வயிறா போச்சு,,,,

சின்ன புள்ளைக்கு பால் கொடுத்து,,,
பசியடங்க வச்சாலும்,,,,பெரிய புள்ள,,,
ஒரு வேளை வச்ச கஞ்சியையும்
குடிக்க மாட்டேங்குது,,,

,,,,கடையிலேர்ந்து கடனா வாங்கியாந்த
ரொட்டியயும் சாப்பிடமாட்டேங்குது,,,

ஒரு வாரமாவே எதையோ,,,எழந்தமாதிரி,,
பாத்து யோசிக்குது,,,,உடம்புக்கு எதோ
வெசனமோ ன்னு யோசிச்சப்பத்தா,,,

பக்கத்து வீட்டு மேரியக்கா சொன்னாக,,,,
புள்ளைகள,,பாக்கற வைத்தியரு டவுனுல
யாரோ புதுசா யெலவச மருத்துவம் பாக்கறாகன்னு,,,

அப்பனில்லாத புள்ளைகள வளத்து
கரை சேக்கறதுகுள்ள அவளுக்கும் யெதுவும் ஆயிடக்கூடாதுங்குற ரோசனையுங்கூட,,,

நல்ல வெய்யிலு,,

வேலை விட்டு பாதியிலேயே ஓடியாந்து,,,
புள்ளைகள கூட்டிகிட்டு பஸ் ஹ புடிச்சி,
ஒரு வழியா ஆஸ்பத்திரிக்கு போயி சேருறப்போ ,,,மணி,,,சாயங்காலம்,,,நால,,,
தொட்டுடிச்சி,,,,

வரசையில நின்னு டோக்கன வாங்கியாந்து
புள்ளைய டாக்டராண்டாம் காமிக்கும்போது
மணி எழ தாண்டிருச்சி,,,

லக்ஷ்மி டாக்டரிடம்

டாக்டர் அய்யா ,,,,,இது என்னோட மூத்த பொண்ணு,,,,,
எதிலேயுமே ஒரு ஆர்வம் இல்லாமே இருக்கா,,,

கடந்த ஒரு வாரமா என்ன கொடுத்தாலும் சரியா சாப்பிடமாட்டேங்கறா எதையோ எழந்த மேனிக்கு யோசிக்கிறா,,ன்னு சொல்ல,,,

டாக்டர் அந்த குழந்தையை பரிசோதனை
பண்ணி பார்த்துட்டு,,

லக்ஷ்மி,,கிட்டே,,,

பசிக்கிறதுக்கு இதுல மருந்து எழுதிருக்கேன்,,

அதுகூட ஊசியும் எழுதிருக்கேன்,,
கொஞ்சம் மருந்து கடையில இருந்து
வாங்கிட்டு வாங்க

ஊசி போட்டுட்டு பின்ன மருந்து சாப்டான்னா பசியெடுக்கும்
அப்புறம்,,நல்லா சாப்பிடுவான்னு சொன்னதை கேட்டு,,,

லக்ஷ்மி மருந்து வாங்கி வர கடைக்கு போன தருணம்,,,

,,,,,அக்குழந்தை,,டாக்டரிடம் கேட்டது,,,

"டாக்டர் பசிக்காம இருக்க மருந்து எதாச்சும்,,இருக்கா டாக்டர்,,,",,என்று கேட்ட அப்பெண்ணை,,,

அதிசயத்துடன்,,உற்று பார்த்தபடியே
புரிந்து கொண்டார் அவர்களின்,,
வறுமை நிலையினை,,,,,,,,

"ஒரு கவளம்,,சோறு கூட இல்லாத நிலையில் தன் பிள்ளைகளுக்கு பாலுட்டிய தாயானவள் தன் வயிற்றில் கட்டினாள் ஈரத்துணி"

அதை புரிந்த அந்த மகவு,,,,இறைவனிடம் இறைஞ்சினாள் வறுமையிலும் கொடுமையான வரமொன்றை ,,அதுவே பசியின்மை என்னும் சாபம்,,,,"

",,,,So Everybody,,,,,,before going to waste your food,,,,just think about this,,,,the thing is,,,,we can change evrything,,,,if feasible,,,"

அனுசரன்,,,,,

எழுதியவர் : அனுசரன் (20-Nov-13, 7:50 pm)
பார்வை : 266

மேலே