வெற்றிக்கு வழிதேடு வெல்லும்வரை போராடு

நட்பே வா! உயர்வோம் வா!
நீண்டு வளர்வோம் வா!
நிறைவின்றி வெல்வோம் வா!
நீதான் பெருஞ்செல்வம்!
நீயேதான் உனக்குதவி!
நிகரற்றோரை நெருங்காதே!
நிகரானோரை பேசவிடு!
நிதானமாகக் கேள்!
நண்பன்போல் அமைதிகொள்!
நிறைய தெரிந்துகொள்!
நிலமையை உணர்ந்துகொள்!
நல்லவைகளை தேர்ந்தெடு!
நீதியை தெரிந்துகொள்!
நேர்மையை நெஞ்சத்தில்வை!
நோக்கத்தை கருத்தில்வை!
நிகரற்ற திறமைகொள்!
நீங்காத உறுதிகொள்!
நாளும் உழை!
நிமிடங்களை சேகரி!
நிம்மதிக்கு அனுமதி!
நாடேவியக்க உயரம்செல்!
நானிலமேபோற்ற பெருமைகொள்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (26-Nov-13, 8:53 am)
பார்வை : 694

மேலே