அன்னை ஆசி
வலியை நினைத்தும்
வாய் பிளக்கும் அதிசயம் ஏன்?
சிறகடிக்கும் மனதினை
சிந்தி
சிருங்காரமாய் வளர்கின்றது
உன்னிலிருந்து
என்னைக் கரைத்து
என்னுள் ஓர் உயிர்
எவ் அதிசயத்தில் இணைக்க
இதனை
இயற்கை அன்னையின்
இந்த இமாலயப் பரிசினை
மூச்சு முட்டும் சந்தோஷத்துடன்
ஏற்கிறேன் என்
அன்னையின் ஆசியோடு

