கீதைக்கான பாதை

எத்தனையோ வகையான
மழைதுளிகளை
இரசித்திட்ட போதெல்லாம்
அசைவுறாத ஆன்மா
ப்ஸ்ஸூக்குள் தள்ளுண்டு
போகையில்
வெகுண்டெழுகிறது...!
எததனை வகையான
மனிதர்கள்....!
தீப்பெட்டியாய் ஒருசாரார்...!
வெயிலாய் ஒருசாரார்...!
சர்ப்பமாய் ஒருசாரார்...!
மந்திரவாதியாய் ஒருசாரார்...!
என் பந்தியிடுகிறது பட்டியல்..!
ஒரு ஒரு கனவாய்
ஒவ்வொரு முறையும்
சுமந்து செல்கையிலும்
வேண்டா வெறுப்பாகிறது
இந்த பஸ் பயணம்...!
நிராயுதபாணியான
அர்ச்சுனனுக்கு வாழ்வானது
கீதாசாரம்...!
பஸ்ஸூக்குள் படும் அல்லலால்
அபசாரமாகிறது
அசதி கொண்ட பொழுதுகள்...!
எத்தனை வகை வேள்விகளை
வெல்வது இந்த பஸ் பயணத்தில்...!
புயலுக்குள் பூவை சுமந்திட
மறுக்கிறது மனம்...!
வெறுக்கிறது நிஜம்...!
என்ணிப்பார்த்தால்
ஒவ்வொரு பொழுதிலான
எ(ந்த)ன் பஸ் பயணமும்
எனக்குமோர் மகாபாரதம்தான்...!
இருந்தும்
கீதைக்கான பாதையைத்தான்
தேடுகிறேன்...!!!

எழுதியவர் : (29-Nov-13, 5:03 pm)
பார்வை : 79

மேலே