எங்கிருக்கிறாய் என் சந்தோஷமே

நான் அனுதினமும்
செய்யும் வேலைகளில்
உன்னைக் காணவில்லையென்றால் !
என் வாழ்நாள் முழுவதும்
உன்னைக் காணமுடியாது !

இரண்டு நாட்களுக்கு பிறகு
எனக்கு ஒரு விருது கிடைக்கிறதென்றால்
காத்திருக்கிறேன்...
அன்று மட்டும் தான்
உன்னைக் காண முடியும்மென்று !

என்ன உத்திரவாதம் ?
இந்த நிமிடம்,
என் மனத்தால் அறிய முடியாத நீ
இரண்டு நாட்களுக்கு பிறகு மட்டும்
உன்னை எப்படி அறிய முடியும் ?

என் எதிர்காலத்துடனும்,
எனக்கு பிடித்தமான பொருளை வாங்கிய பின்பும்,
ஒரு இலக்கின் முடிவை நான் அடைந்த பின்பும் தான்,
உன்னைக் காண முடியுமென்றால் - அதுவும்
ஓரிரு நாட்களுக்கு மட்டுமே !

உனக்காக
காத்திருந்து, காத்திருந்து
வருடங்கள் ஓடியது தான் மிச்சம் !

என் சந்தோஷமே, எங்கிருக்கிறாய் நீ ?

என்னால்,
இருப்பதை வைத்துக்கொண்டு வாழ முடியுமென்றால்...
என்னைச் சுற்றி நடப்பவைகளனைத்தும்
நன்மைக்கே என்று எண்ணினால்...
அன்றாட வேலைகளை
சகிக்காமல் செய்வதென்றால்...
என் பொறுப்புகளை உணர்ந்து
கடமையை சரிவரச் செய்தால்...

உன்னை தேட வேண்டிய அவசியமில்லை !

ஏனென்றால்
இந்த நிமிடம், இப்பொழுதும்,எப்பொழுதும்
என்னுடனேயே நீ இருக்கிறாய் !

என் சந்தோஷம்
இருக்குமிடம் அறிந்தேன் !
உங்களுடைய சந்தோஷம் ?

எழுதியவர் : Karthika (4-Dec-13, 2:55 pm)
பார்வை : 171

மேலே