அச்சொல் நீக்கப்பட வேண்டும்

பொய்கள் பல பேசி
குன்றிய மனம் கொண்டு
வலைகள் பல பின்னி
சிக்கும் மீன்களைத் தேடி
இரைகளுடன் சென்றனர்..

எதிர்காலம் என்னவென்று
அறியாது , இன்று ,இவ்வேளை
ஒரு பருக்கை சிக்கும் கடலோரம்
கோடி மீன்கள் மதி மூடி
கண் திறந்து நீந்தின...

இறை போட்டு வலை வீசி
சிக்கின மீன்கள், இரை தின்று
ஒரு நொடி உயிர் தெழிந்து,
மறு நொடி ,உயிர் துறந்தன ,
கண் கொல்லும் காட்சி! ,

கண்டும் காணாமல் செல்லும்
எம்மக்கள், சீரிப்பந்தன
மூன்று வேலை சோற்றுக்குள்!
எவனோ ,எவளோ , நானும்
எம் வீட்டாரும் சுகம் சுகமே !....

'எளியவன்'? வெட்கமாக இருக்கிறது
மனிதனுள் இப்பிரிவுகள் ,ஏற்றத்தாழ்வுகள்!
மனம் காணத்தவிக்கவில்லையா ?
'எளியவன்' என்ற சொல்
தமிழ் அகராதியில் இருந்து நீக்கப்பட்டதை? !!!!


கைகொடுப்போம் இன்றே ..!

எழுதியவர் : Aswini (7-Dec-13, 1:14 am)
பார்வை : 122

மேலே