துயர்சொல்லா தொப்புள்கொடி

வாயாற வைந்துவிட்டு
வைக்கிறேன் எனசொல்லி
வைக்காமல் தொடர்கிறேன்
தொலைபேசி அழைப்பினை....

அழைப்பினை துண்டிக்காமல்
அலுப்பினை சொல்வாளென....!

" ஆண்டவா எம் புள்ளைக்கு
அங்க என்ன கஷ்டமோ "

அலைவரிசை தொலைந்துவிட்டது-
அழுகுரல் அவளை சேரும்முன்...!

தொப்புள்கொடி தூரத்தில்
துயரம் மறைத்தவள்
தொலைதூர வாழ்விலும்
துயர்சொல்ல மறுக்கிறாள்...

எழுதியவர் : காசி. தங்கராசு (8-Dec-13, 10:36 pm)
பார்வை : 59

மேலே