என்ன சொல்ல எப்படி சொல்ல

" என்ன சொல்ல? எப்படி சொல்ல? "

கருவிழி காந்தங்களின்
பார்வையீர்ப்பில்
இரும்பு இதயம்
ஒட்டிக்கொண்டது!

ஒற்றைப் பார்வையில்
மனம் உலகையே மறந்து
இன்பக் கடல் கடந்து
எல்லையில்லா களிப்பிலாடும்!

புன்னகையோடு பதுமைபோல் வந்தாய்!
பதுமைகள் பேசுமா? அறிந்ததில்லை!
பதுமைகளின் ராணியே பேசியபோது
வியப்புக்கு எல்லையே இல்லை!

உனது உருவம் பட்டுப்பட்டு
வெறுங்கண்ணாடி வைரமானது!
உனது பிம்பம் தெரிந்ததால்
வெறுந்தண்ணீர் தங்கமானது!

ஓவியப் பேரெழிலால்
உள்ளம் கொள்ளைகொள்கின்றாய்!
ஓரவிழிப் பார்வைகளால்
உனதடிமை ஆக்குகின்றாய்!

கனவின் ஓவியமே!
வண்ணக் காவியமே!
உன்சுகமே பேரானந்தம்!
உன்அன்பே பரமானந்தம்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (13-Dec-13, 12:23 am)
பார்வை : 217

மேலே