வாழவைத்து இறந்துவிட்டான்

ஏழை
உழவன்
ஏர்பிடித்து..

பல நாட்கள்
பாடுப்பட்டு
உண்ணும் உணவுப்
பொருட்களை எல்லாம்..

நமக்கு
உயிர் வாழத் தந்து விட்டு...

அவனுக்கு
உண்ண உணவில்லாமலும்..

உடுத்த
உடையில்லாமலும்..

நான்
செய்த உதவியை
மறந்த மனிதர்களே!
என்று சொல்லிக்கொண்டு...

தனக்குத்
தன்மானம்
இருக்கிறது என்று...!

தன்னுயிரை
மாய்த்துக் கொள்கிறான்..

எழுதியவர் : தமிழ் மகன் (14-Dec-13, 6:28 pm)
பார்வை : 233

மேலே