அறிமுகம் நானே அறிவீர் நீரே

நான் ஒரு
வாழும் கிறுக்கி
வரைகிறேன் பொறுக்கி !
விழுவேனோ சறுக்கி
பிடிப்பீர் முறுக்கி
பிழையின்றி திருத்தி
நடத்துவீர் நிறுத்தி !
சுருக்கத்தில் வாழ்த்தி
சுற்றுவேன் கிறங்கி !

அறிவில் தொடங்கி
அன்பில் அடங்கி
தொடருவேன் விளங்கி !

தகையோர் இணங்கி
தருவதை வாங்கி
வளருவேன் ஓங்கி!

இறையை வணங்கி
தளத்தை போற்றி
நட்பை வாழ்த்தி !
வேஷம் விலக்கி
நேசம் கூட்டி
அறிவின் ஜோதி
அன்பின் சாதி
என்றே ஓதி
உங்களை பாடி
வருவேன் நாடி !

சரோ

எழுதியவர் : சரோ (21-Dec-13, 10:17 am)
பார்வை : 114

மேலே