பாரதியின் படைப்பு

பாரதியனை உன்னை போல் ஒருவன்
இல்லாமல்தான்
நாட்டில் சண்டைகளும்
சச்சரவுகளும் , கொலைகளும்
திருட்டுகளும் கொட்டி
கிடகின்றன !
பாரதியனை உன் படைப்புகளில் மனிதனை
புகழ்ந்து போற்றினாய் !
அச்சமில்லை அச்சமில்லை என்று நீ கூறி
மனிதனை நல்ல வீரனாக மாற்றினாய் !
தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா என்று நீ கூறி
மனிதனை ஒரு நல்ல தமிழனாக மாற்றினாய் !
காக்கை குருவி கூட எங்கள் ஜாதி என்று கூறி
மனிதனை நல்ல மனிதனாக மாற்றினாய் !
அம்மனிதன் எங்கே ?
நாட்டை காப்பாற்ற வருவானா !
நாட்டு மக்களை காப்பாற்ற வருவானா !
நீ உன் படைப்புகள் மூலம்
ஊட்டி வளர்த்த வீரம்தான் எங்கே !
வீரம்தான் எங்கே !
வருவானோ
உன்னை போல் தமிழன் !