படமே பாடமாகட்டும்

மனிதருள் சாதிஇன கலவரம்
மண்ணில் நாளும் இது நிலவரம் !
நட்புணர்வு மறைந்தது இங்கே
பகையுணர்வே வளருது இங்கே !
மானின் உணர்வும் காட்சியாய்
காகமுடன் கனிவு சாட்சியாய் !
ஐந்தறிவும் அறியாது சாதிஇனம்
ஐக்கியமாகுது அன்பால் இங்கே !
ஆறறிவுக்கோ பிரிவினை எண்ணம்
ஆற்றாமையே அன்றாட நிகழ்வால் !
மாறிடுவோம் மானை பார்த்து
மறந்திடுவோம் மாச்சர்யங்களை !
படமே நமக்கு ஒரு பாடமாகட்டும்
பாரினில் என்றும் நிலைக்கட்டும் !
பழனி குமார்