“ பத்திகிச்சி “

தோள் சாய் என்றேன் – உன்
தோள் சாய்த்து
எனை இம்சிக்கிறாய் ...
அடி கள்ளி
உன் கருங்குவளை விழிகொண்டு
கள்வன் என்னையே
களவாடிச் செல்கிறாய் ...
கனியிதழ் வருட
என் விரல் துடிக்க – உன்
ஓரப் பார்வை அதை
ஒடித்துப் போடுகிறதே....
பூக்களெல்லாம்
செய்த சிகையழகும்
உன் மத்தாப்புச் சிரிப்பின் முன்
மங்கித்தான் போனதடி !
பசுமையெல்லாம்
ஆடையாகி - உந்தன்
மேனியைத் தழுவுதடி ...
கர்வம் கொண்டு
இருந்த என்னைக்
கைகட்டி நிற்க வைத்தாய் ..
ஆசை முத்தம் ஒன்று கேட்டேன்
அதில் அனலாகித் தகிக்கிறாயே ...
சிக்கி முக்கி கல்லைப் போல
கிட்ட வந்து வந்து உரசுறியே ...!