கனவுப் பூ

சுவற்றில் சாய்ந்திருந்தாள் மாதவி. இடுப்பு லேசாக வலிப்பது போல இருந்தது. எப்போ வலி வந்தாலும் உடனே ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்துடுங்க ஏன்னா இதுதான் அவுங்களுக்கு டைம்.....ஏம்மா மாதவி...வலி அதிகமாச்சுன்னா....வந்துடு சரியா...? பனிக்குடம் உடைஞ்சா வெளில வர்ற லிக்விட் கொஞ்சம் பிசு பிசுப்பா கெட்டியா இருக்கும்...உடனே கெளம்பி வந்துடுங்க...... காலையில் டாக்டர் சுபா சொன்னதை நினைத்துக் கொண்டாள்.

சுவற்றில் வாகாக சாய்ந்து உட்கார்ந்திருந்த மாதவி வயிற்றை தடவிப் பார்த்தாள். உள்ளுக்குள் ஒரு ஜீவன் வெளியே வர துடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். கீழே தரையில் தலைக்கு கை கொடுத்தபடி படுத்திருந்த அம்மாவையும், அப்பாவையும் பார்த்தாள். எழுப்புவோமா....என்று யோசித்தாள். இப்பதானே லேசா சுரீர்னு வலிக்கிற மாதிரி இருக்கு.. இன்னும் வலி கொஞ்சம் கூட போனிச்சின்னா எழுப்பலாம்...யோசித்தவள்....

சுதா.. சுதா என்று மெல்லிய குரலில் அவள் தங்கையை அழைத்தாள். வாரிச் சுருட்டி எழுந்த சாம்பசிவம்...ஏத்தா.. என்ன வேணும்......?

இல்லப்பா கொஞ்ச வெந்நீர் வேணும்....குடிக்க...

சரசு ஏய்...சரசு...பிள்ளை வெந்நீர் கேக்குற பாரு........சொல்லிக் கொண்டே மணி பார்த்தார். இரவு பதினொன்று ஆக...15 நிமிடம் என்று காட்டியது.

நீ படும்மா........தேவைப்பட்டா எழுப்புறேன் உன்னைய.....வெந்நீரை குடித்தபடியே மாதவி சொன்னாள். கவலையாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த சரசுவுக்கு தூக்கம் கண்ணைச் சுழற்றியது. ஒரு வாரம் தூக்கமே இல்லத்தா....அம்மா கொஞ்சம் அசந்துட்டா கூட அதட்டி எழுப்புத்தா....

சரசு மறுபடி சாய்ந்தாள்...உறங்கிப் போனாள். சாம்பசிவம்...மகளைப் பார்த்தபடியே...உறங்கிப் போனார்.

மாதவி சுவற்றில் சாய்ந்தபடியே வயிற்றைத் தடவிக் கொண்டிருந்தாள்.

***

ஏண்டி... எத்தனை பேரு கால்ல விழறது...? செம்ம டயர்டா இருக்கு எனக்கு... நான் தூங்கிடுவேன் பரவாயில்லையா...? பிரதீப் கேட்ட கேள்வியின் அர்த்தத்தை உள் வாங்கிக் கொண்டாள் மாதவி. ச்ச்சே...ச்ச்சே... எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லப்பா...நானும் தூங்கதான் வெயிட்டிங்...தலை குனிந்தபடியே சொன்னாள்.

ஏன் மாமா...சின்ன வயசுல இருந்தேதான் தெரியும்ல...உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு அப்புறம் என்ன எனக்கு த்ரில்லு இருக்கப் போகுது...?

அடிப்பாவி...மகளே த்ரில் இல்லாமத்தான்..வந்து இருக்கியா...? இன்னிக்கு ஃபர்ஸ்ட் நைட் நமக்கு...

அதான் யாரோ தூங்கப் போறேன்னு சொன்னாங்களே....? மாதவி நகைகளை கழட்டியபடியே ப்ரதீப்பை வம்புக்கிழுத்தாள்.

அப்டீ எல்லாம் சொல்லி எஸ்கேப் ஆக முடியாது...மகளே.. ..ப்ரதீப் மாதவி தோளில் கை போட்டான்.

மாமா....என்ன அதுக்குள்ள...இப்டி....சரி...என்னை ஏன் மாமா புடிக்கும் உங்களுக்கு...?

இந்த உலக மகா கேள்விய எத்தனை காலத்துக்கு நம்ம சமூகம் சுமக்கப் போகுதோ ஹா...ஹா.. மாதவி பிடிக்கிறதுக்கு என்ன காரணம் வேணும்..? பிடிக்கும்னா பிடிக்கும்...அவ்ளோதான்..!

இன்னொன்னு சொன்னா கோச்சுக்க மாட்டியே....தங்கம் நீ...?

என்ன மாமா...சொல்லுங்க...? பிரதீப்பின் அணைத்தலுக்கு உடன்பட்டு அவன் கைக்களுக்குள்ளிருந்து முகம் பார்த்து நெருக்கமாய் கேட்டாள் மாதவி....

கல்யாணம் எதுக்கு பண்ணிக்கிறோம் தெரியுமா?

வாழ்றதுக்கு...அப்பாவியாய் உதடு சுளித்தபடி சொன்னாள் மாதவி.

ஹம்ம்ம்க்கூம்ம் கல்யாணம் பண்ணாட்டி எல்லாரும் செத்துப் போய்டுவாங்களா என்ன...? அப்பவும் வாழத்தானே செய்வாங்க லூசு...

அச்ச்சோ மாமா அப்டி எல்லாம் இல்லை...சரி நீங்க சொல்லுங்க....

எம்.பி.ஏ இன்டர்நேசனல் மார்க்கெட்டிங் சப்போர்ட் பண்ணலியா மாதவி செல்லம்...இந்த கேள்விக்கு பதில் சொல்ல....

படிக்கிறது....படிக்க...நீங்க கேட்டதுக்கும் இன்டர்நேசனல் மார்க்கெட்டிங்கும் என்ன சம்பந்தம் மாமா இருக்கு...? அவன் மார்பில் செல்லமாய் குத்தினாள்.

கல்யாணம் பண்ணிக்கிறது...செக்ஸ் வச்சுக்க.......பிரதீப் மாதவியைப் பார்த்தான்.

ச்ச்சீ..போ மாமா...ஏன் அப்டி சொல்றீங்க...? ஏன் கல்யாணம் பண்ணிக்கலேன்னா செக்ஸ் வச்சுக்க முடியாதா...? ப்ரதீப்பை மடக்கினாள்...மாதவி...

வச்சுக்கலாம். பட்...இதுல ஒரு கம்ஃபோர்ட் இருக்கு. அப்டியே செக்ஸ் வச்சுக்கிட்டு குழந்தை பெத்துக்கிட்டு அது என் வாரிசுன்னு சொல்லி பெருமைப்பட்டுக்கலாம். அப்புறம் அந்த வாரிசுக்காக வாழ்றேன்னு சொல்லி ஏதோ ஒரு அர்த்தத்தை உருவாக்கிக்கலாம்...அதே நேரத்துல....எல்லோரும் இப்டி வாழ்றது ரொம்ப சிறப்புன்னு சொல்லி வச்சுட்டுப் போய்ட்டாங்க....

ஒருத்தனைப் பார்த்து ஒருத்தன்...அவனைப் பார்த்து இன்னொருத்தன்னு எல்லோரும் இந்த சமுதாயத்துல நாங்களும் ஒரு அங்கம்னு ஆணித்தரமா சொல்லிக்க...இப்டி மேரேஜ்.....அப்டி இப்டீன்னு....

இதோ இன்னிக்கு உன் கழுத்துல தாலி கட்டி உன்னை தொடப்போறேன்..இதை போன வாரம் செஞ்சிருந்தா தப்புன்னு நீயே சொல்லுவ...? சரியா?

ஆமா....முறைப்படி எல்லாம் நடக்கணும்ல....மாதவி சீரியசாய் பதிலினாள்.

அந்த மொறை ஊர்ல இருக்க எல்லோர்கிட்டயும் நாங்க கல்யாணம் கட்டிக்கிட்டோம்..அதுக்கப்பறம் செக்ஸ் வச்சுக்கப் போறோம்னு மறைமுகமா பர்மிசன் கேக்குறதுதானே...?

ஹூ த ஹெல் ஆர் தே...அவுங்க கிட்ட பெர்மிசன் வாங்கி.... நாங்க முறைப்படி சேர்றோம்னு ஏன் சொல்லணும்.....? புடிச்சு இருக்கு சோ வேணும்னா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு....போய்ட்டே இருக்கலாம்ல....

ஹ்ம்ம்ம்ம் மாமா நீங்க எல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை.....எது எப்டியோ...எனக்கு இங்க நிறைய நல்லது கெட்டதுகள இந்த சமூகம் சொல்லிக் கொடுத்து இருக்கு...நல்லது கெட்டதுன்னா..இந்த சமூகந்தான் நம்ம பின்னாடி வந்து நிக்கப் போகுது..சோ...அவுங்கள அனுசரிச்சு ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள வாழ்றது எனக்குப் பிடிச்சு இருக்கு....தட்ஸ் ஆல்....

எம்.பி.ஏ. இன்டர்நேசனல் மார்க்கெட்டிங் நிஜமாவே இப்போ கம்பீரமா எந்திருச்சு நின்னு கர்ஜிக்குதுடி.....பிரதீப் மாதவியை அணைத்தான்.

மாமா....எது எப்டி இருந்தாலும் உன்னை எனக்குப் பிடிக்கும் மாமா...அந்த நெருக்கம்...அவளை ஒருமையில் பேச வைத்தது.

பேரச் சொல்லியே கூப்டுடி செல்லம்...ஐ டோண்ட் மைண்ட்.....கலாச்சாரம் மண்ணாங்கட்டின்னு காலையில எழுந்து என் காலைத் தொட்டு கும்பிட்டு தாலிய எடுத்து கண்ணுல ஒத்திக்க கூடாது....சரியா....

மாமா...டோண்ட் வொர்ரி...அப்டி எல்லாம் நீங்க கேட்டாலும் செய்ய மாட்டேன்...ஓகேயா....மாதவி சிரித்தாள்.

அன்பாய் பிரதீப் அவளை அணைத்துக் கொண்டான்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மிக முக்கியமான ஒரு இரவாக முதலிரவு அமைந்து போய்விடுகிறது. ஒரு பெண்ணை ஆணும், ஆணைப் பெண்ணும் எதிர்கொள்ளும் வசீகர ராத்திரி அது. பிரபஞ்ச சுழற்சியின் அடிப்படை இனவிருத்தி. தன்னை பல்கிப் பெருக்கிக் கொள்ளல். விரிந்து கொண்டே செல்லும் இந்த பிரபஞ்சத்தின் மைய அச்சு காமம். தன்னை விஸ்தாரித்துக் கொள்ளல். இப்படியான அர்த்தம் நிறைந்த காமத்தை சரியான விதத்தில் தெளிவோடு, புரிதலோடு, நிதானத்தோடு, அணுகும் போது வாழ்க்கை பற்றிய புரிதலை மனிதர்களால் பெற முடிகிறது. அத்தனை ஜீவராசிகளிலும் தான் யார் என்ற சுய உணர்வை மனிதனே பெற்றிருக்கிறான். அப்படி தன்னையும் தன்னைச் சுற்றி இருப்பவற்றையும் பகுத்தறிந்து புரிந்து கொள்ளும் தன்மையை தான் செய்யும் செயலின் முழு சந்தோசத்தை, வலியை, துக்கத்தை ஆச்சர்யத்தை அவனால் வாங்கிக் கொள்ள முடிகிறது.

விலங்குகளின் காமம் வேறு வகை. அங்கே உணர்விலிருந்து உணர்ச்சி பிறக்க உணர்ச்சியோடு அது முடிந்து போகிறது. நான் இங்கே இவ்விதம் இவளை அல்லது இவனைப் புணர்கிறேன். இதில் எனக்கு இவ்வளவு சந்தோஷமாகிருக்கிறது. இங்கே என் உடன் இருக்கும் இவனோ அல்லது இவளோ என்னவள், என்ற ஒரு உரிமையோடு காமம் மனிதர்களுக்கு ஒரு இறுமாப்போடு கூடிய சந்தோசத்தைக் கொடுக்கிறது ஆனால் விலங்குகளிடம் உணர்ச்சியே மேலோங்கி நிற்கிறது. கூடி முடிந்த பின்பு அந்த உணர்ச்சி வடிந்து போக திசைக்கொன்றாக பிரிந்து செல்லும் விலங்குகளைப் போன்றல்ல மனிதர்கள்...

காமம் அனுபவமாய் புத்தியில் ஊறிப் போய் அந்த புரிதல் கொடுக்கும் தெளிவில் வாழ்க்கை பற்றிய நிதானம் பிறக்கிறது. காமத்தை சரியாய் அணுகாத மனிதர்கள் மிகப்பெரிய குழப்பத்திற்கு ஆளாகிப் போகிறார்கள். விலங்குகளைப் போல புணர்ந்து விட்டு மனிதர்களைப் போல வாழ அவர்கள் விரும்பி இரண்டுக்கும் நடுவில் ஒரு அகோர வாழ்க்கையை இயற்கை அவர்களுக்குப் படியளந்து விடுகிறது. திருமணம் சடங்குகள், என்பதெல்லாம் ஒரு மனிதனைப் பயிற்றுவித்து ஒரு சீரான இயக்கத்தில் இருக்க வைக்க விபரம் தெரிந்தவர்கள் செய்து வைத்த ஒரு ஏற்பாடு.

இயற்கை சுதந்திரமானது ஆனால் சீரான ஒரு கட்டுப்பாடு கொண்டது. ஏனோ தானோ என்று பிரபஞ்சத்தில் எதுவுமே கிடையாது என்றுதான் விஞ்ஞானம் சொல்கிறது. அணுக்களின் உள்ளே மையக்கருவைச் சுற்றி வரும் புரோட்டானும் எலக்ட்ரானும் கூட சீரான அதிர்வுகளோடு ஒரு ஒழுங்கில்தான் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. முறையற்ற யாவும் விபரீதத்தையும் பேராபத்தையும் எதிர்விளைவுகளையும் உருவாக்கும்.

நன்மை, தீமை என்பது வேறு. அது மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான லெளகீக வார்த்தை. நேர், எதிர் விளைவுகள் என்பது வேறு. இதில் யாரும் பலன் பெறுவதோ அல்லது இழப்பதோ என்ற எந்த எதிர்ப்பார்ப்புகள் இருப்பதில்லை. செடி வளர்ந்தால் பூ பூத்தால், காயானால் அது ஒரு இயக்கம். அது நேர்மறையானது. அது பட்டுப் போனால் அழுகிப் போனால் மண்ணோடு மண்ணாக மட்கிப் போனால் அது எதிர்மறை இயக்கம். இரண்டுமே இயக்கம். ஒன்றில் இருக்கும் சுமூக விளைவு இன்னொன்றில் இருப்பது இல்லை. இயக்கத்தில் அதன் விளைவில் மனிதர்களுக்கு நற்பலன் இருந்தால் அது நன்மை என்றாகிறது.

பிரதீப்பின் முழு ஆளுமைக்குள் வந்திருந்தாள் மாதவி. காமத்தை காதலோடு செய்யும் போது அங்கே கச்சேரி களை கட்டி விடுகிறது. மூர்க்கமாய் காதலை தெரிவிக்க ஒரு வழிமுறையாய் காமம் இருக்க...அங்கே தாள வாத்தியங்கள் ஒரே சீராக ஒலிக்க ஆரம்பிக்கிறது. அவள் விட்டுக் கொடுத்தாள்...இவன் முன்னேறினான்....அவன் மூர்க்கமானான்...இவள் முடங்கிக் கிடந்தாள்.....

ஆணும் பெண்ணும் தங்களின் படைப்பின் அர்த்தம் தீர்க்க அங்கே போராடிக் கொண்டிருந்தன. பிரிந்த இரண்டு சேர துடித்துக் கொண்டிருந்தது.

வெளியே மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. அடை மழை. திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லோரையும் பந்தலில் இருந்து விரட்டியது மழை. இடி இடித்தது. மின்னல் வெளிச்சத்தில் மறுபடி விடிந்து விட்டதோ என்று ஆடு மாடுகள் பயந்து போய் கத்தின. முரட்டுத்தனமாய் பெய்த மழைக்கு ஏற்றார் போல காற்றும் பலமாக வீசியது.....புயல் எதுவும் வந்துவிட்டதோ என்று பயந்து போய் இடி இடித்த போதெல்லாம்...அர்ச்சுனன் மேல் பத்து...என்று யாரோ சப்தமாய் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அடித்துப் பெய்த மழை விடியல் காலையில் பளீச் என்று விட்டிருந்தது. தாவரங்கள் எல்லாம் தளர்ந்தும், மலர்ந்து மழையை வாங்கிக் கொண்ட சந்தோசத்தில் அந்த அதிகாலையில் சிலிர்த்து நின்றன. பூமியில் ஒரு குளுமை பரவி இருந்தது.

பிரதீப் மாதவியின் மீதிருந்து இறங்கி புரண்டு படுத்தான்...மாதவிக்கு ஏதோ ஒரு உணர்வு ஒன்று அடிவயிற்றில் மின்னலாய் வெட்டியது. மனம் யோசிக்க ஏதுமற்று வெறுமையில் இருந்தது. அவளின் உடலுக்குள் ஏதோ ஒரு மாற்றம்...அடிவயிற்றில் ஒரு நிறைவு....ஏற்பட்டது. நிதானமாய் படுத்திருந்தாள். ஒருக்களித்து தன் புருசனின் நெஞ்சில் படுத்தாள்...

எவ்ளோ ப்ரியமான புருசன் எனக்கு கிடைத்திருக்கிறான். முரடன்....டேய் முரடா......என்னடா செஞ்ச என்ன....? மெதுவாய் அவன் காதில் கிசு கிசுத்தாள்....காது கடித்தாள்...

பிரதீப் பிரஞ்ஞையற்றுக் கிடந்தான். உடலும் மனமும் அடங்கிக் கிடந்தன....அரை விழியால் கிறக்கமாய் அவளைப் பார்த்தான். இழுத்து....அணைத்துக் கொண்டு உச்சியில் முத்தமிட்டான்...!


(தொடரும்...)

எழுதியவர் : Dheva .S (13-Jan-14, 9:27 pm)
Tanglish : kanavup poo
பார்வை : 231

மேலே