இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள்பொங்கல் விழா கவிதைப் போட்டி

அவனி தொழுது,
ஆதவனை வணங்கி;
இன்பத்தை -மட்டும்
ஈனும் நோக்கோடு
உழவன் விதைத்தான்-இவ்
ஊரார்க்கு நெல்லை...!
எருது ஓட்டி-வந்து
ஏர் பூட்டி,
ஐம்புலன் துணைக்கூட்டி
ஒவ்வொரு நாளும் உழைத்தான்-தீர்க்க
ஓர்த்து உலகப்பசியை..!
அவ் விதம் நாமும் மனம்கொளேல்
இஃது உயர்வில்லை..!

ரா.தர்ஷன் (வாலி)

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

எழுதியவர் : ரா.தர்ஷன் (வாலி) (14-Jan-14, 12:05 pm)
பார்வை : 98

மேலே