அன்புக்காக ஏங்கும் அடிமைகளில் ஒருவன்

அல்லல் படும் போது அரவணைக்க
அன்னை இல்லை
துயரத்தில் உடன் இருக்க
உடன் பிறந்தோர் இல்லை
மகிழ்ச்சியில் மனம் மகிழ
சொந்தங்கள் இல்லை
கண்கலங்கும் போது கண்துடைக்க
காதலி(மனைவி) இல்லை
தனிமையில் தன்னம்பிக்கை கூற
நண்பர்கள் இல்லை
இருந்தும்
கை நிறைய பணம்
இருக்கிறது
அதே சமயம்
மனம் நிறைய
கணமும் இருக்கிறது
இப்படிக்கு
அயல்தேசத்தில் அன்புக்காக
ஏங்கும் அடிமைகளில் ஒருவன்
உங்கள்
நாசர் அலி

எழுதியவர் : (20-Jan-14, 12:53 am)
பார்வை : 299

மேலே