உலக தமிழர்களிடத்தில் ஒற்றுமை பொங்கல் திருவிழா கவிதை போட்டி

உலக தமிழர்களிடத்தில் ஒற்றுமை
நிலவவில்லை என்பதுதான்
நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய
நிதர்சனமான ஒரு கசப்பு உண்மை.

சாதி தமிழரை இழிக்கிறது,
மதம் தமிழரை சரிக்கிறது,
கட்சி தமிழரை பிரிக்கிறது.
எத்தனைப் பிரிவுகள்!
எத்தனைச் சரிவுகள்!
எத்தனை இழிவுகள்!....
எத்தனை வேற்றுமைகள்!...
நம் தமிழர்களிடத்தில்!

தானே தலைவன்! தானே தொண்டன்!
வீட்டுக்கோர் சங்கம்! என்பது
தமிழர் ஒற்றுமைக்கு ஏற்படும் பங்கம்!
சேர சோழ பாண்டியர்
மூவரும் இணைந்து இருந்தால்!
பகைவரின் கால்கள் தமிழ்மண்ணில்
பட்டிருக்குமா?
உலக தமிழர்களிடத்தில் ஒற்றுமை தான்
கெட்டிருக்குமா?

எழுதியவர் : (20-Jan-14, 11:19 am)
சேர்த்தது : ஔவ்வைதாசன்
பார்வை : 65

மேலே