நூலை போல சேலை
"ஏய் கல்யாணி ! ஏதாவது காசு இருந்தா தாடி .........
சுந்தரத்துக்கு 2000 ரூபா தரனும் .........."
"என்கிட்டே ஏதுங்க?"
"மாச கடைசி வேற ....வீடு தேடி வந்துட்டா அசிங்கமா போய்டும் ......ம்ம்ம் ......."
"அப்பா ! சுந்தரம் அங்கிள் வந்திருக்கார் !"
"அப்பு செல்லம் ! அப்பா வீட்ல இல்லன்னு சொல்லிடு டா குட்டி !"
"ஏம்பா ..... .பொய் சொல்லணும் ?"
"அது ஒன்னும் இல்லடா குட்டி ....அப்பாவுக்கு சுந்தரம் அங்கிள் கூட டூ டூ ........"
ம்ம்ம்ம்....சரிப்பா .........
மறுநாள் ...
பக்கத்துக்கு வீட்டு நித்து வீட்ல இருந்து அப்பு ஓடி வரான்.........
"ஏதுடா அப்பு இவ்ளோ அழகான பென்சில் ?.....உன்ன
பக்கத்து வீட்டு நித்து அம்மா கூப்பிடறாங்க ...நித்து உன் பேர சொல்லி எதுக்கோ அழுவராணம் ....."
"நா அவன ஒன்னும் பண்ணலையே .அவன் ஒரு லூசு மா ......."
"ஒய் .பொய் சொல்லாம சொல்லு .இது அவனுடைய பென்சில் ஆ?"
"இல்லம்மா .நீ போய் அவங்க அம்மாக்கிட்ட .அப்பு வீட்ல இல்ல .அவன் பாட்டி வீட்டுக்கு போய்ட்டான்னு சொல்லு ......"
"பொய்யா சொல்லுற .ஒத படுவ........"
"இல்லம்மா.........அப்பா...... சுந்தரம் அங்கிள் கூட டூ டூ மாதிரி ...........நா நித்து கூட டூ டூ ......."
"!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"