படிப் படியாய்

ஏறு .
முதற் படி !

இமய மலை என்றாலும்
இருக்கின்ற வாழ்க்கை என்றாலும்

ஒரு படி
முதற் படி.

இப்போது முடியாமல் போகலாம் .

முயலாவிட்டால்
எப்போதுமே முடியாது .

கால்களில் வலுவும்
கைகளில் திறனும்
நெஞ்சினில் துணிவும்
ஏற்று.

பின்
உன் வாழ்க்கை
உன் ஆசைப் படி...
நீ நினைத்த படி !!

எழுதியவர் : (23-Jan-14, 10:04 pm)
பார்வை : 330

சிறந்த கவிதைகள்

மேலே