படிப் படியாய்
ஏறு .
முதற் படி !
இமய மலை என்றாலும்
இருக்கின்ற வாழ்க்கை என்றாலும்
ஒரு படி
முதற் படி.
இப்போது முடியாமல் போகலாம் .
முயலாவிட்டால்
எப்போதுமே முடியாது .
கால்களில் வலுவும்
கைகளில் திறனும்
நெஞ்சினில் துணிவும்
ஏற்று.
பின்
உன் வாழ்க்கை
உன் ஆசைப் படி...
நீ நினைத்த படி !!