உறவையும் உயிரையும் கெடுக்கும் குடிப்பழக்கம்

இயற்கைத் தாயே குடியை கொடுத்து
பலர் குடியை கெடுத்தாய்,

நினை விழந்து குடிக்க வைத்து
பல உறவைக் கெடுத்தாய்,
நிலை மறந்தே குடிக்க வைத்து
சிலர் உயிரைக் கொன்றாய்,

பொருள் விற்றே குடிக்க வைத்து
பெண்டீர் நல்வாழ்வைக் கெடுத்தாய்,
கடன் வாங்கி குடிக்க வைத்து
இளவிதவை பட்டத்தைக் கொடுத்தாய்,

இயற்கைத் தாயே குடியை கொடுத்து
பலர் குடியை கெடுத்தாய்,

- சு.சுடலைமணி

எழுதியவர் : சு.சுடலைமணி (24-Jan-14, 6:01 pm)
பார்வை : 307

மேலே