தமிழ் மாதங்கள்

தை பிறந்தால் வழி பிறக்கும்
தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கும்....
_
மாசியில் மங்களம் சூடிடும்
புது வரவுகள் பொங்கிடும்.....
_
பங்குனியில் ஊரெங்கும் திருவிழா தெருவெங்கும் தேரோட்டம்.....
_
சித்திரை வெயிலை இளநீர் பதநீர் தணிக்க சித்திரை விழாக்கள் கோலாகலமாகும்....
_
வைகாசியில் வைபோகம் கன்னியரும் காளையரும்
மணமாலைகள் சூடிட மங்களமாகிடும்.....
_
ஆனியில் உச்சிவெயில் தணியும் ஊரெல்லாம் மெல்லிய தென்றல் வீசும்.....
_
ஆடியில் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிடும் உழவு ஆடிப்பட்டம் தேடி விதைக்கும்.....
_
ஆவணி வந்ததும் நல்வரவும் வந்திடும் தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நிகழ்ந்திடும்.....
_
புரட்டாசி விரதம் மாந்தரின்
மனதை பக்குவப்படுத்த உதவிடும்....
_
ஐப்பசி மழை அடை மழை
ஊரெல்லாம் தீவுபோல் காட்சியளிக்கும்....
_
கார்த்திகையில் இல்லம்தோரும் அகல்விளக்கு ஒளிர்ந்திட நன்மைகள் குடி புகுந்திடும்....
_
மார்கழி குளிரில் வாசல்களில் கோலங்களும் வயல்களில் வசந்தங்களும் பூத்திருக்கும்...

எழுதியவர் : Akramshaaa (24-Jan-14, 6:14 pm)
Tanglish : thamizh maathankal
பார்வை : 109

மேலே