ரசிகனாக மாறு - ரசிக்கப் படுவாய்

கவிதைகள் எழுதும் வானம்
காலையில் எழுந்தால் புரியும்

கனவுகள் எழுதும் வண்ணம்
கவலைகள் மறந்தால் தெரியும்

உணர்வுகள் முழுதும் என்றும்
ஊடுருவும் மகிழ்ச்சி புரியும்

உண்மை ரசனை பெருகும் - இனி
உன்னையும் உலகம் ரசிக்கும்....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (27-Jan-14, 8:00 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 55

மேலே