என் அக்காவின் மகனுக்கு,,,,

எந்த ஒரு மலரும் தந்ததில்லை,
உன் பூ முகம் தரும்
புன்னகை போல்....

எந்த ஒரு மழையும் நனைத்ததில்லை,
உன் எச்சில் கொண்டு கொடுத்த
முத்தம் போல்...

எந்த ஒரு காட்சியும் இப்படி இன்பம் கொடுத்ததில்லை,
உன் துயில் சோம்பல்
முறிக்கும் அழகினை போல்....

எந்த ஒரு கவிதையும்
இனித்ததில்லை,
உன் கை விரல் கவிதைகள்
கிழித்த காகிதம் போல்....

நான் நானாய் இருக்கும் நேரங்களில்,
நாணுகிறேன் உன்னைப்போல்,
உன் நினைவுகளால்,
மீண்டும் குழந்தையாய்...........

எழுதியவர் : சுகன் dhana (27-Jan-14, 11:10 pm)
பார்வை : 3051

மேலே