இரக்கமற்ற இதயம்

அந்தி மாலை...
மழைத்தூரும் வேலை...
மரங்களின் அசைவில் மெல்லிய காற்றில் கருமேகத்தில்
மல்லிகைத் தோட்டம்
மணம் வீச....
நீலப் போர்வையணிந்து என் முன்னே...
மின்னல் சிரிப்பில்...
பின்னல் நடையில்
என்னை கடந்த
அந்த நொடிகள்....
என் இதயத்தில் வேலை நிறுத்தம்....
மயங்கி விழுந்தேன்....
அவளின் இரக்கமற்ற இதயத்தில்..

எழுதியவர் : சந்தோஷ் கண்ணன்.ஆ (30-Jan-14, 9:58 am)
சேர்த்தது : சந்தோஷ் கண்ணன்.ஆ
பார்வை : 110

மேலே