சிரிப்பு சிறப்பு

தவழ்ந்த குழந்தை
சிரித்த போது
தெரிந்தது மழலை.

நடந்த குழந்தை
சிரித்த போது
தெளித்தது அழகு.

வளரும் குழந்தை
சிரித்த போது
தெறித்தது குறும்பு.

வளர்ந்த பெண்
சிரித்த போது
தோன்றியது அச்சம் .

சிரிப்பிலே பல விதம்
பல பருவங்களில்
அறியும் விதம்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (30-Jan-14, 10:34 am)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 1739

மேலே