எனக்காக கரைந்தவன்

என் எண்ணத்தை வண்ணமாக்க
கரைந்தவன் நீ ..!
என் வாழ்க்கையை முழுமையாக்க
கரைந்தவன் நீ ..!
பேச இயலா தருணங்களில்
உன்னை கரைத்து என் உள்ளம்
உரைத்தவன் நீ !
கண்ணீரோ புன்னகையோ
இரண்டிலும் என்னோடு இருந்தவன் நீ !
நீ இன்றி நான் முழுமை இல்லை ..!!
"என் அன்பு எழுதுகோலே !!"

எழுதியவர் : ரம்யா எம் ஆனந்த் (1-Feb-14, 9:21 am)
பார்வை : 65

மேலே