இரவின் பக்கங்கள்

விழி நோக்கின்
இதழ் பூக்கின்
விரல் தாக்கின்
இடை வேர்க்கின்
கர்வம் தகர்ந்து
உடைதல்
காமத்து பால்....

யார் மீது யார் என்ற
புரியாத புரிதல்கள்,
அணை தாண்டும்
புது வெள்ளம்-அது
அலை மோத கடல் துள்ளும்....

மனமெங்கும் நகம் கீற,
நகமெல்லாம் புதுமொழி கூற,
அர்த்தங்கள் இடம் மாறும்...
சப்தங்கள் தடம் கூறும்.....

கற்பனை பூக்களின்
நீட்சி
காம்பில் முடிய,
அதிலிருந்து விரிகிறது
இரு பூந்தளிர் குன்றுகள்.....

மெல்ல தவழும் விரல்களின்
ரேகைகளில் படரும்
பாதைகள்
சொர்க்கம் கூட்டி செல்வதாக
நீள்கிறது இரவின் பக்கங்கள்.......

தலை கீழ்
தீச் சுடரின்
ஒலி ஓவியமென
மெல்ல விரியும்
திரை சீலை
இரவின் பக்கங்களில்
தீ மூட்டுகிறது....

கடைசி பக்கம்
அசையாமல்
நகர்வதில்
ஆச்சர்ய இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்
ஒரு கடவுள்
ஒரு குழந்தையென.........

கவிஜி விழி நோக்கின்
இதழ் பூக்கின்
விரல் தாக்கின்
இடை வேர்க்கின்
கர்வம் தகர்ந்து
உடைதல்
காமத்து பால்....

யார் மீது யார் என்ற
புரியாத புரிதல்கள்,
அணை தாண்டும்
புது வெள்ளம்-அது
அலை மோத கடல் துள்ளும்....

மனமெங்கும் நகம் கீற,
நகமெல்லாம் புதுமொழி கூற,
அர்த்தங்கள் இடம் மாறும்...
சப்தங்கள் தடம் கூறும்.....

கற்பனை பூக்களின்
நீட்சி
காம்பில் முடிய,
அதிலிருந்து விரிகிறது
இரு பூந்தளிர் குன்றுகள்.....

மெல்ல தவழும் விரல்களின்
ரேகைகளில் படரும்
பாதைகள்
சொர்க்கம் கூட்டி செல்வதாக
நீள்கிறது இரவின் பக்கங்கள்.......

தலை கீழ்
தீச் சுடரின்
ஒலி ஓவியமென
மெல்ல விரியும்
திரை சீலை
இரவின் பக்கங்களில்
தீ மூட்டுகிறது....

கடைசி பக்கம்
அசையாமல்
நகர்வதில்
ஆச்சர்ய இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்
ஒரு கடவுள்
ஒரு குழந்தையென.........

எழுதியவர் : கவிஜி (18-Feb-14, 11:36 am)
Tanglish : iravin pakkangal
பார்வை : 1723

சிறந்த கவிதைகள்

மேலே