பிறந்த நாள் வாழ்த்து

தை பொங்கல் பொங்கட்டும்
என் வீடு கர்ஜிக்கட்டும்
என பிறந்தவன் நீ

வான் நிலா இரவு சூழ
சுட்டி குயில் கீதம் பாட
விண்மீன் மெட்டுக் கட்ட
தாலாட்டு பெற்றவன் நீ

தன் மகன் தலை மகனாய்
ஆறடிச் சிங்கமாய்
வானவில் வண்ணமாய்
உலகில் வளர்ந்தவன் நீ

நான்
என் குடும்பம்
என் வாழ்கை
என வாழாமல்
இயன்ற வரை வரியோருக்கு கொடு

நாம் பிறக்கும் பொழுது
எதை கொண்டு வந்தோம்
பிறருக்கு உதவி செய்தால்
எதையும் வாழ்வில் இலக்க மாட்டோம்

உன் பிறந்தநாள்
நீ பிறந்தாக மட்டும் இல்லாமல்
நல்ல செயல் செய்ய பிறந்த
ஆரம்பமாக இருக்கட்டும்

இயலாதவர்களுக்கு நீ செய்யும் உதவி
வருடம் 365 நாட்களும் உனக்கு
பிறந்த நாட்களாக அமையும்

உன் பெயரைச் சொல்லி
யாரோ ஒரு முதியவர் சிரிப்பர்
பள்ளிச் சிறுவன் படிப்பான்
தங்கை புத்தாடை உடுத்துவாள்
அவர்களின் ஆசி
பல தலைமுறைகள் வாழும்

என்றும் உன் சிரிப்பை
பிறரிடம் பார்
உலகம் சிறக்கும்


அன்புடன்
ரவி சங்கர்

எழுதியவர் : கண்மணி (20-Feb-14, 11:14 pm)
பார்வை : 26617

மேலே