பாடல் பிறந்த கதை

அன்பிற்குரிய இசைஞானி அவர்களே! வணக்கம்! நலம் நலமே விழைக!
தங்களின் இசை நாடறிந்தது. தாங்கள் ஜனனி ஜனனி அமைத்த ராகம் எதுவென்று கூட தெரியாத எனக்கு, அதன் மீது ஆழ்ந்த ஈடு பாடு உண்டு.தாங்கள் கூட பேட்டியில் அது ஆதி சங்கரர் அருளால் மெட்டமைத்ததாக கூறி இருந்தீர்கள்.என் அன்னை அபிராமி என்னிடம் அதற்கான மெட்டை தந்த விதத்தை இப்படி கூறினாள்.அந்தப் பாடலை கந்தர் அனுபூதி மெட்டில் தந்தாளாம், ஆம் அம்மையே பாட அதை கிளி வடிவில் அருணகிரி பாடியது தானே கந்தர் அனுபூதி. ஆம் அதன் சந்தம் “தனனா தனனா தனனா தனனா” அன்றோ, முதல் பாடல் தொடங்கி “உருவாய் அருவாய்” பாடல் வரை நூல் முழுதும் ஒரே சந்தம்தான். என் அன்னை சொன்னதை சொன்னேன். இசைஞானி அவர்களே இதை படித்து பார்த்து எனக்கும்பதில்எழுதுவீர்களா?..ஏங்குகிறேன்
அன்புடன்
சு.அய்யப்பன்
இப்படி எழுதி தபாலை சேர்த்துவிட்டு காத்திருக்கிறேன் பதில் வருமென்று..